Tuesday, December 2, 2008

காகிதமேறும் கனவுகள்

மங்கையிவளது விரல்
நேற்று பெய்த மழையில்
முளைத்த புல்லோ - முகமோ
காய்ச்சிய பாலின்
பொங்கிய நுரை – சிகை
உருவமேற்ற குழலின் இசை

அலுப்பின் எதிரியே – நீ
விரக்தியின் இம்சை
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்
என் கண்கள் கெட்டாலும் கனவு வரும்
கண்கள் பதித்த கவிதை – நீ
கனவுகளின் உரிமை

பாவையிவள் பாதமதை நானறியேன்
நங்கையிவள் நானங்கொண்டு;
மானாக துள்ளி, மின்னலென மறைவதனால்
வாய்மொழி கேட்கவோ, காதிரண்டு போதாது
அவள் வாய் பேசுவது பகுதி
கண்கள் பேசுவதே மிகுதி

மின்னொளிக்கும் மின்னலுக்கும் போட்டியாம்
மின்மினியே – நீ
சிரித்துவிடாதே!! மின்னலின் பெருமை
சிருமை பட்டுவிடும்
மிகைத்து க்கூறவில்லை நான்
மீத மிருக்கிறதென் பெட்டகத்தில்………

ஜம்ஷீது,
காங்கோ,
12/11/08.

முதிர் கன்னிகள்

கண்கட்டி ஆடத்தான்
காலம் எனை அழைத்தது
கண்கட்டைக் கைமாற்ற
காற்றினிலே துழாவுகிறேன்
நெடு நாட்கள் காத்திருந்தே
கிட்டுவதற்க்கில்லை எவரும் இங்கே
கட்டவிழ்த்துப் பார்க்கையிலே
என் நிழல் மட்டும் தனிமையிலே
கால்கட்ட வழி இல்லை
கண்கட்டிப் பழக்குகிறது காலம்

ஜம்ஷீது,
Castoro II,
Gabon,
29/10/2008.

என்னவென்று சொல்ல

யாழென்று சொல்வதா
உன் இதழென்று சொல்வதா

நிலவென்று சொல்வதா
உன் நிறமென்று சொல்வதா

இடையென்று சொல்வதா
அதை இல்லையென்று சொல்வதா

நெருப்பென்று சொல்வதா
உன் பெண்மையென்று சொல்வதா

காலனென்று சொல்வதா
உன் கண்களென்று சொல்வதா

என்னவென்று சொல்ல
ஏனைய விடயங்களை
கண்கள் உண்டு களித்ததை
கைகள் உணரவில்லையே

ஜம்ஷீது,
காங்கோ,
21/10/08.

Monday, December 1, 2008

இவைகள் பேசினால்

நாம் ஏன் பிறந்தோம்
ஏன் சேர்ந்தோம்
அறியமாட்டோம்

நம்மைச் சுற்றி இயங்கக்கூடிய
இந்த உலகம்.....
ஏன் இத்தனை பரபரப்பு?
அறியமாட்டோம்

எங்களுடைய பயணத்திற்கு
ஏன் இத்தனை பாதுகாப்பு
அறியமாட்டோம்

இன்றளவும் அறியமாட்டோம்
எங்களை படைத்த காரணத்தை
ஆனால் அடுத்தப் பயணத்திற்கு
ஆயத்தமாகிவிட்டோம்

ஆஹா, இந்த பயணம் தான்
எத்தனை ஆனந்தமானது
வேகமாய்....
விண்ணில் பாய்ந்து.....
காற்றைக் கிழித்து.....
ஒளியைப் பிளந்து....

அலறல் சத்தம்
விழித்துப் பார்த்தால்
பூமிக்குள் செயற்கையாய் ஒரு
பூகம்பத்தை ஏற்ப்படுத்தியவர்களாக....

எத்தனை காதலைக் குடித்திருப்போம்?
எத்தனை கனவுகளை நசுக்கியிருப்போம்?
எத்தனை நம்பிக்கைகளைத் தளர்த்தியிருப்போம்?

ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலையை உருவாக்கியதைத்தவிர
வேறு எதைச் சாதித்திருக்கிறோம்?

அழிக்கத்தான் பிறக்கிறோம் என்று
ஆக்கத்திலேயே தெரிந்திருந்தால்
எங்களை உருவாக்கியவர்களை முதலில் அழித்திருப்போம்

ஆயுதக்கிடங்குகளும், ஆயுதத்தொழிற்ச்சாலைகளும் விபத்துக்குள்ளாவது
இந்த உண்மையை அறிந்து தானோ?

ஜம்ஷீது,
காங்கோ,
19/10/08.

தண்ணீரல் இருந்து தள்ளாட்டத்திற்கு. . . . .

அலுவல் வேலை காரணமாக கரைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம்

அலுவல் வேலை முடிந்து
அனைவரும் அலாவல் வேலையைத் தொடர
நான் மட்டும் தனியாக கரையில் அமர்ந்து
கடலை ரசித்துக்கொண்டிருந்தேன்

கரையில இருந்து கடலை ரசிப்பதற்க்கும்
கடலில் இருந்து கடலை அனுபவிப்பதற்க்கும்
எத்தனை வித்தியாசங்கள்!
உண்மைதானே....

பெண்மையின் கதகதப்பில்
காதலிலும் கலவியிலும்
வேறுபாட்டை உணர்வது இயற்க்கை தானே.....

ஜம்ஷீது,
17/9/08,
Bos Congo Marine Base,
படகிற்காக கரையில் காத்திருக்கிறேன்.

தொலைக்க இடம் தேடி . . . . . .

எண்ணையால் இயங்கும் இந்த இரயில்
என்னையும் ஏற்றிச்செல்கிறது
நானோ என் வறுமயை ஏற்றிச்செல்கிறேன்
தொலைக்கவும் இடம் தேடுகிறேன்
தொலைத்து விட்டாலோ
காலம் எனைக்கேட்கும்
“உன்னிடம் இருந்த ஒன்றையும்
தொலைத்து விட்டாயே………”

ஜம்ஷீது,
மார்ச் 2008.

கண் கெட்ட பிறகு……….

கண்களால் கைது செய்வது இயற்கை தான்
ஆனால் இவளென்
கண்களையே கைது செய்துவிட்டாளே
இதனால் தான்
காதலுக்குக் கண் இல்லாமல் போகிறதோ?

ஜம்ஷீது,
6/9/08.